யாழ்.நகரிலிருந்து ஊர்காவற்றுறை செல்வதற்கு ஆட்டோ பிடித்த பெண் ஒருவர் 11 ஆயிரம் ரூபாய் ஆட்டோ கட்டணம் கேட்டதால் அதிர்ச்சியடைந்து 1800 ரூபாய் கொடுத்து மார்ட்டின் வீதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
பலாலி வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றிருந்த பெண் ஒருவர் மாலை ஆனதால் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு பிடித்துக் கொண்டு ஊர்காவற்றுறைக்கு செல்ல திட்டமிட்டிருக்கின்றார்.
இதன்போது ஆட்டோ ஓட்டுனர் 11 ஆயிரம் ரூபாய் வாடகை கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் 1800 ரூபாய் கொடுத்து மார்ட்டின் வீதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கிவிட்டு மறுநாள் பேருந்தில் சென்றுள்ளார்.
3 இலக்கங்களில் பணம் அறவிட்ட முச்சக்கர வண்டிச்சாரதிகள் பலர் இப்போது 4 இலக்கங்களில் கேட்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்றாடம் பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் தம்மிடம் யாழ் நகர முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் பெற்றோல் தட்டுப்பாட்டை காரணம் கூறி பெருமளவு பணத்தை கறப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.